தமிழ்நாடு தனியார் ஆசிரியர் ஒருங்கிணைப்பு அறக்கட்டளை சார்பில்,200- நபர்களுக்கு விருது வழங்கப்பட்டது.!
தமிழ்நாடு தனியார் ஆசிரியர் ஒருங்கிணைப்பு அறக்கட்டளை சார்பில், ஆசிரியர்களுக்கான மாபெரும் விருது வழங்கும் விழா, தஞ்சை பெசன்ட் அரங்கில்,13/7/2024 அன்று மாலை 6 மணி அளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆசிரியர் ஒருங்கிணைப்பு அறக்கட்டளையின் நிறுவனரும், தலைவருமான, லாரன்ஸ் தலைமை தாங்கினார், தஞ்சை தமிழ் பல்கலைகழக பேராசிரியரும், செய்தி மக்கள் தொடர்பு அலுவலருமான, முருகன், விஜயா,கிரேஸிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நடைபெற்ற நிகழ்வில், ஆசிரியர் விருது, பேராசிரியர் விருது மற்றும் சமூகஆர்வலர் விருது உள்ளிட்ட விருதுகள், சுமார்,200- நபர்களுக்கு வழங்கி, அவர்கள் அனைவரையும் கௌரவிக்கப்பட்டு பாராட்டப்பட்டது. ஆசிரியர் ஒருங்கிணைப்பு அறக்கட்டளையின் நிறுவனர் லாரன்ஸ் அவர்களின் பொன் கரங்களால் வழங்கப்பட்டது.
இதுவரையும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், சுமார்,15,000/-க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இதுபோன்று அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆசிரியர், ஆசிரியை, மற்றும் பேராசிரியர்களுக்கு தொடர்ந்து விருதுகள் வழங்கி அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், அவர்களை மீண்டும், மீண்டும், உற்சாகப்படுத்தும் வகையிலும், இந்த நிகழ்வானது தொடர்ந்து செயலாற்றிக் கொண்டே இருக்கின்றது. விருது பெரும்போது ஒரு சிலர் குடும்பத்துடன் கலந்துகொண்டு விருதுகளை பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வானது அனைவரையும் வியக்க வைத்தது என்று தான் சொல்லப்பட வேண்டும். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment