Skip to main content

ஜாமின் கையெழுத்து நூதன மோசடி!

சுமார் 530- தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் ஓட்டுனர், நடத்துனர்கள் சுமார் 450-பேர் உள்ளனர். இவர்களில் சக ஓட்டுனருக்கு ஜாமீன் கையெழுத்து போட்டு பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கலியமூர்த்தி, இராமச்சந்திரன் தலைமையில் இன்று காலை 12 மணிக்கு தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளரிடம் புகார் மனு அளித்தனர். அந்த புகாரில் கூறியுள்ளதாவது: தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை, பாபா நகர் விரிவாக்கம், மனை எண் 47 என்ற முகவரியில் வசித்து வரும் கண்ணன் மகன் பூபதி என்பவர் தஞ்சாவூர் நகர கிளையில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். 
இவர்  சக தொழிலாளர்களிடம் நட்பாகவும், குடும்ப உறவாகவும் பழகி தன்னுடைய குடும்பத் தேவைகளுக்கு தனியார் சிட் பண்டு நிறுவனத்தில் ஏலச்சீட்டில் ஏலம் எடுப்பதாகவும், அதற்கு சம்பள ரசீதும், ஜாமீன் கையெழுத்தும் போட வேண்டும் என்ற தனித்தனியாக பேசி, தனியார் சிட்பண்ட் நிறுவனங்களான ஜெயப்பிரியா, தனலட்சுமி சீனிவாசன், DNC சிட்ஃபண்ட் நிறுவனங்களில் தனது பெயரிலும், தாயார் விஜயா, மனைவி ஹெலன் ரோஸ், மைத்துனர் அந்தோணிசாமி பேரிலும் ஒன்றுக்கு மேற்பட்ட சீட்டுகளுக்கு கையெழுத்து போட வைத்துள்ளார். இவர் ஒரே நபர் பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட ஏலச்சீட்டுகளை எடுத்தது, ஒரு தொழிலாளரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட ஏலச்சீட்டுகளுக்கு ஜாமீன் கையெழுத்து பெற்றது உள்ளிட்ட மோசடிகளுக்கு தனியார் சிட்பண்ட் நிறுவனங்கள் மேற்படி பூபதிக்கு உதவியாக இருந்துள்ளனர். ஏலச்சீட்டுகளை எடுத்த பிறகு அவர் முறையாக மாதாமாதம் தவணைகளை செலுத்தவில்லை. இதனால் அந்த நிறுவனங்களில் இருந்து வந்த நீதிமன்ற நோட்டீஸ்பெற்ற தொழிலாளர்கள், பூபதி ஓட்டுனரிடம் கேட்ட போது நான் பணம் கட்டி விட்டேன், அவர்கள் தவறாக அனுப்பி உள்ளார்கள், நான் நேரடியாக பேசிக் கொள்கிறேன். உங்களுக்கு பாதிப்பு வராது என்று பொய்யாக கூறி அந்த கடிதங்களையும் வாங்கி வைத்துக்கொண்டு நீதிமன்றத்திலும் ஆஜராகவில்லை. இதனால் ஒருதலைபட்சமாக தீர்ப்பளிக்கப்பட்டு, கும்பகோணம் கழக நிர்வாகத்தால் ஒவ்வொரு தொழிலாளலி சம்பளத்திலும் மாதாமாதம் சுமார் ரூ.5,000/- முதல் 10,000/- வரை பணம் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.
 
ஒட்டுமொத்தமாக ரூ.1,00,000/- கும் மேலாக மாதம் மாதம் இந்த தவணைகளை தொழிலாளர்கள் செலுத்தி வருகின்றனர். அதனால் குடும்ப பொருளாதாரம் மற்றும் பிள்ளைகளின் கல்வி உள்ளிட்ட செலவுகள் பாதிக்கப்படுகின்றன. குடும்பங்களை நடத்த முடியவில்லை, செலவுகளை சமாளிக்க முடியவில்லை, நாங்கள் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். ஜாமின் கையெழுத்து பெற்று நூதனமோசடி செய்த பூபதி ஓட்டுநர் மீதும், அவருக்கு உடனடியாக இருந்த சிட்பண்ட் நிறுவனங்கள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளரை தஞ்சாவூர் வழக்கறிஞர்கள் இ.சதீஷ்குமார், கே.ஹரிஹரசுதன், அ.துரைராஜ், சட்டக்கல்லூரி மாணவர்கள் எஸ்.சையது அக்ரம், எஸ்.மோனிகா, ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளனத்தின் மாநில துணைத்தலைவர் துரை.மதிவாணன், சி.பி.எம்.எல். (மக்கள் விடுதலை) மாநில துணை தலைவர் இரா.அருணாச்சலம் மற்றும் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கலியமூர்த்தி, பாவேந்தன், பழனி, ராமச்சந்திரன், பாலதுரை, ஸ்ரீதர், தியாகராஜன், பிரசன்னா, கண்ணன், சாமிநாதன், ரமேஷ், சேகர், ஆரோக்கியசாமி, நவமணி, வினோத் எடின் ப்ரோ,குமார், அலுவலக பணியாளர் சாந்தி உள்ளிட்ட 20க்கு மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

செய்தியாளர் வேங்கை குணா.

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...