Skip to main content

மக்களுக்காக பணியாற்றும் கட்சி திமுக கட்சி மட்டுமே.! - மேயர் ஜெகன் பெரியசாமி

 தூத்துக்குடி கலைஞர் 101வது பிறந்தநாளை முன்னிட்டு மாநகர பகுதியான 15வது வார்டு சாா்பில் திரவிய ரத்தின நகர் பகுதியில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட பிரதிநிதியும் கவுன்சிலருமான இசக்கிராஜா தலைமை வகித்தாா். மேயர் ஜெகன் பொியசாமி கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கலைஞர் படத்திற்கு மாியாதை செலுத்தி 500 பேருக்கு சேலை, வழங்கி பேசுகையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க கலைஞாின் 101வது பிறந்தநாள் விழா நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. அதனடிப்படையில் இந்த பகுதியிலும் நடைபெறும் தேர்தலுக்கு பிறகு முதல்விழா மழை காலங்களிலும் தேர்தல் காலங்களிலும் அதிமுக உள்பட பல எதிர்கட்சிகள் போட்டோவுக்கு போஸ் மட்டும் கொடுத்துவிட்டு சென்று விடுவார்கள் ஆனால் மக்களுக்காக பணியாற்றும் கட்சி திமுக மாநகர பகுதியில் 90 சதவீதம் சாலை பணிகள் நிறைவடைந்துள்ளன. அதிலும் சிறிய பொிய என புதிதாக 2000 சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிக்கும் இபி காலணியில் பணி நடைபெறுகிறது. விரைவில் நிறைவு பெறும். நடைபெற்ற நாடாளுமன்ற தோ்தலில் திமுகவிற்கு ஓட்டுமொத்தமாக ஆதரவு கொடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றியை தொிவித்துக்கொள்கிறேன். மக்கள் பணியை தொடர்ந்து செய்வது தான் எங்களது கடமையாகும் முதலமைச்சரும் அப்படி தான் எங்களுக்கு உத்தரவிட்டிருந்தார்கள். பணி செய்யாதவர்கள் பதவியில் இருக்க முடியாது. பல கட்சிகள் போட்டியிட்டும் கனிமொழி எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழக்கும் வகையில் கட்சி பணியையும் சிறப்பாக செய்தவர்களுக்கு நன்றிகடன் பட்டுள்ளேன். தொடர்ந்து எல்லோரும் மக்கள் பணியாற்றுவோம் என்று பேசினார்.

விழாவில் கவுன்சிலர்கள் கண்ணன், பொன்னப்பன், வட்டச்செயலாளர்கள் பொன்பெருமாள், சுரேஷ், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் டினோ, மாநகர ெதாழிலாளர் நல அணி அமைப்பாளா் முருகஇசக்கி, விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் அன்பழகன், மாநகர இலக்கிய அணி தலைவர் சக்திவேல், வட்ட அவைத்தலைவர் பிரம்மசக்தி, துணைச்செயலாளர் ராஜ்குமாா், வட்டப்பிரதிநிதிகள் செல்வம், பேச்சிராமன், சோமசுந்தரம், கணேசன், ஞானப்பிரகாசம்,  நிர்வாகிகள் பொியமேடை கார்த்திக், ராஜா, ஐயப்பன், சீனிவாசன்,  உள்பட பலர் கலந்து கொண்டனர்.


செய்தியாளர் அ. ரவி 

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...