தூத்துக்குடி வ.உ.சி.கல்வியியல் கல்லூரியின் 69வது கல்லூரி விழா இன்று வ.உ.சிதம்பரம் கல்லூரியின் கலையரங்கத்தில் கொண்டாடப்பட்டது. விழாவில் கல்லூரியின் முதல்வர் த.கனகராஜ் வரவேற்புரை மற்றும் ஆண்டு நிகழ்வு அறிக்கையை வழங்கினார். இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) மு.சுப்புலட்சுமி கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில், கல்வியின் சிறப்பு மற்றும் ஆசிரியருக்கான இலக்கணங்கள் குறித்து கருத்துரை வழங்கினார்.
மேலும் செயல்திறனை மேம்படுத்த மாணவ-ஆசிரியர்கள் வலுவான ஆளுமைகளை வளர்த்துக்கொள்வதோடு அன்பு, அறிவு, அறம் சார் விழுமியங்களையும் தன்னகத்தே கொண்டவர்களாகத் திகழவேண்டும் என்று கூறினார்.அவரது உரையைத் தொடர்ந்து கற்றலில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகளும் கேடயங்களும் வழங்கி கௌரவித்தார். கல்லூரியில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கவின் கலைகள் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினரால் பரிசுகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்சிகளும் அரங்கேற்றம் செய்யப்பட்டது. பின் கல்லூரியின் மாணவத் தலைவர் ஜோதிலெட்சுமி நன்றியுரை வழங்கினார்.
செய்தியாளர் அ. ரவி.

Comments
Post a Comment