Skip to main content

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க, தஞ்சை தெற்கு மாவட்ட 15-வது பேரவை கூட்டம்.!

 தமிழ்நாடு ஓய்வுப்பெற்ற அரசு ஊழியர் சங்க, தஞ்சை தெற்கு மாவட்ட 15-வது பேரவை கூட்டம், தஞ்சை பெசன்ட் அரங்கில்,15.6.2024 அன்று காலை 10 மணியளவில், சங்க கொடியினை ஏற்றி வைத்த பின் நிகழ்ச்சியானது துவங்கியது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் ம. குமாரவேலு தலைமை தாங்கினார், மாவட்டத் துணைத் தலைவர்,ம. இராஜன்  வரவேற்புரை வழங்கினார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர்,ரெ. சுரேஷ்குமார் துக்க உரையாற்றினார். மாவட்ட துணைத்தலைவர், இரா. கருணாநிதி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்,பின் ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் அமுதன் வேலை அறிக்கை வாசித்தார், மாவட்ட பொருளாளர் த. முத்துசேவு நிதி நிலை அறிக்கையினை சமர்பித்தார், அதன் பின்பாக  விவாதமும், பதிலுரையும் நடத்தப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.மாவட்டத் துணைத் தலைவர்,ம. இராசரெத்தினம், மாவட்டத் துணைத் தலைவர்,ரெ. கருணாகரன், ' மாவட்ட இணைச் செயலாளர்,ந. குணசேகரன், மாவட்ட இணைச் செயலாளர் இரா. சத்தியசீலன் ஆகியோர்கள் கருத்துரை வழங்கினர், கிழக்கு வட்ட தலைவர்,க. மாரியப்பன், மேற்கு வட்ட பொருளாளர், ஆர்.இராமானுஜம், பூதலூர் வட்டச் செயலாளர்,வை. ஆறுமுகம், திருவையாறு வட்டச் செயலாளர்,பி. நாகராஜன்  ஆகியோர் தீர்மானங்களை முன் மொழிந்தனர். 

இதன் தொடர்ச்சியாக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. மாவட்ட கருவூல அலுவலர், கோ. கணேஷ்குமார் வாழ்த்துரை வழங்கினார், மாநில செயற்குழு உறுப்பினர்,ச. சோமலிங்கம் சிறப்புரையாற்றினர்,  கே. வி. நடராஜன் நிறைவுறையாற்றினார், நிகழ்ச்சியின் நிறைவாக மாவட்ட தணிக்கையாளர்,எம். கருப்புசாமி நன்றி உரையற்றனர்.15-வது பேரவை கூட்டத்தின் வாயிலாக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களான: 2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் உத்தரவாதம் அளித்தபடி அரசு ஊழியர், ஆசிரியர், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசிளித்து கோரிக்கைகளை ஏற்று உடனடியாக உரிய உத்தரவுகளை பிறப்பிக்குமாறு தமிழ்நாடு அரசை இம் மாவட்ட பேரவை வலியுறுத்துகிறது. 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையையொட்டி, 21-மாத நிலுவைத் தொகையினை விரைவில் வழங்கிடுமாறு தமிழ்நாடு அரசை இம்மாவட்ட பேரவை கேட்டுக்கொள்கிறது.  

கம்யுடேஷன் பிடித்தம் செய்யும்  காலத்தை 15 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாக குறைத்து ஆணையிட இம்மாவட்ட பேரவை தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தூய்மையான குடிநீர், தாய்மார்கள் பாலூட்டும் அறையும், அமைத்து தரவேண்டும் என தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையரை இப்பேரவை கேட்டுக் கொள்கிறது. உலக பாரம்பரிய சின்னமான தஞ்சை பெரிய கோயிலுக்கு வரும் பக்தர்கள் சாலையை கடக்க ஏற்படும் சிரமங்களை போக்கும் வகையில் மின் நகர்வு படிக்கட்டு அமைத்து உதவுமாறு இப்பேரவை கேட்டுக்கொள்கிறது. சத்துணவு ஊழியர்களுக்கு கால வரை ஊதியம், ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை ஆகியவற்றை அளிப்பதாக ஏற்கனவே பிப்ரவரி 2016-ல் முந்தைய அரசு சட்டமன்றத்தில் அறிவித்ததை அமல்படுத்த வேண்டும் என இப்பேரவை கேட்டுக் கொள்வதோடு, சத்துணவு உதவியாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் ஓய்வூதியம், 2000-ஐ,ரூ. 5000-ஆக உயர்த்தி வழங்கிட வேண்டுமெனவும் இம்மாவட்டப்பேரவை   வலியுறுத்துகிறது. மாணவர்கள் பெற்றுள்ள கல்வி கடனை எந்த வித நிபந்தனையும் இன்றி முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகளை இப்பேரவை கேட்டுக்கொள்கிறது. உள்ளிட்ட 21- தீர்மானங்கள் தமிழக அரசின் பார்வைக்கு கொண்டுச் செல்லப்படுகின்றது.


செய்தியாளர் வேங்கை குணா

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...