மதுரையில் நடைபெறயுள்ள தமிழகநாடு வணிகர் சங்கங்களின் விடுதலை முழுக்க மாநாட்டிற்கு படூர் அனைத்து வியாபாரிகள் சங்கத்தலைவர் படூர் KAS. சுதாகர் தலைமையில் முழுகடையப்புச்செய்து வாகனங்களில் மாநாடு நோக்கி புறப்பட்டுச்சென்ற 200க்கும் மேற்பட்ட வியாபாரிகள் !
தமிழகத்தில் உள்ள மதுரை மாவட்டத்தில் இன்று மே05 ஞாயிற்றுக்கிழமை 41ஆம்ஆண்டு வணிகர்கள் தினத்தையொட்டி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஏற்பாட்டில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத்தலைவரும்
அகிலஇந்திய வணிகர்கள் சம்மேளனத்தின் தேசிய முதன்மை துணைத்தலைவருமான ஏ.எம். விக்கிரமராஜா தலைமையில் மாபெரும் வணிகர்களின் விடுதலை முழுக்க மாநாடாக இன்று மாலை சுமார் 03.00மணிணிலிருந்து துவங்கிநடைபெறயுள்ளது. இம்மாநாட்டில் கலந்துகொள்ள தமிழக முழுவதிலிருந்து ஆயிரக்கணக்கான வியாபாரிகள் மதுரைக்கு சென்றவண்ணம் உள்ளனர்கள் . இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட படூர் முதல்நிலை ஊராட்சியில் இயங்கிவரும் படூர் வியாபாரிகள் சங்கத்தின் தலைவரும் , தென்சென்னை கிழக்குமாவட்டதுணைத்தலைவருமான படூர் KAS.சுதாகர் தலைமையில் தங்கள் ஓற்றுமையை நிரூபிக்கும்வகையில் கேளம்பாக்கம் ,படூர் ,நாவலூர் ஏகாட்டூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வியாபாரிகள் முழுகடையடைப்பு செய்து தங்களது மற்றும் வாடகை வாகனங்களின் இன்று நடைபெறயுள்ள மாநாட்டிற்கு நேற்றே புறப்பட்டுச்சென்றனர்கள் . மேலும் நேற்று காலை சுமார் 10.00மணியளவில் படூரில் பெருமாள் கோவில் அருகே சங்கத்தின் தலைவர் KAS.சுதாகர் வணிகர் தினத்தையொட்டி அங்குஅமைக்கப்பட்டிருந்த கொடிகம்பத்தில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சங்கத்தினர்களுடன் மதுரையை நோக்கிபுறப்பட்டுசென்றார்.இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் தமிழகத்திலேயே யாரும் செய்யாதவகையில் கடந்த ஓருமாதகாலமாக மாநாடு நடக்கப்போவதை முன்னிட்டு தனது சொந்த செலவில் மாநாடு பிரச்சாரவாகனத்தின் மூலம் தினந்தோறும் ஒலிப்பெருக்கிமூலமும் துண்டு பிரசுரங்களை வழங்கியும் பிரச்சார பாடல்களை ஓலிக்கவிட்டும் திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய 50ஊராட்சிகளிலும் உள்ள வணிகர்களுக்கு மாநாடு குறித்து படூர் அனைத்து வியாபாரிகள் சங்கத்தலைவரும் , தென்சென்னை கிழக்கு மாவட்டத்தலைவருமான சுதாகர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் என்பது கடந்த ஆண்டு மாநாட்டிற்கு சென்றவர்களை காட்டிலும் இந்தமுறை மூன்றுமடங்குவியாபாரிகள் மாநாட்டிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும் .
செய்தியாளர் மூர்த்தி

Comments
Post a Comment