அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க கோடை வெயிலில் பொதுமக்களின் தாகம் தீர்க்க நீர் மோர் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி செங்குன்றம் அருகே தீர்த்தகரையம்பட்டு ஊராட்சி பாலவாயல் பத்திர பதிவு அலுவலகம் அருகே புழல் ஒன்றிய கழக செயலாளர் ஆர்.சுப்ரமணி தலைமையில், புழல் ஒன்றிய துணைச்கழகச் செயலாளரும், முன்னாள் புழல் ஒன்றிய துணை பெருந் தலைவருமான ஏ. சுகுமாரன் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் பாலவாயல் ஜி.முனுசாமி ஆகியோர் ஏற்பாட்டில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமார மாதவரம் வி.மூர்த்தி தண்ணீர் பந்தலை திறந்து வைத்து ஏழை எளியவருக்கு நீர்மோர், கூல்டிரிங்ஸ் தர்பூசணி, வெள்ளரி, கிருணிபழம் உள்ளிட்ட பழங்களை வழங்கினார்.இதில் மாவட்ட கழக, ஒன்றிய கழக, கிளைக் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள், கழக முன்னோடிகள், கழக உறுப்பினர்கள், மகளிர் அணியினர் திரளானோர் கலந்து கொண்டார்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment