மூத்த குடிமக்கள் நல சங்கத்தின் மாதாந்திர கூட்டம், தஞ்சை பெசன்ட் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சங்க நிறுவனர், ஆதி. நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார், துணைச் செயலாளர், துரை. கோவிந்தராஜ் வரவேற்புரையாற்றினார்,மூத்த குடிமக்கள் நல சங்கத்தின் தலைவர், தென்னை விஞ்ஞானி,வா.செ. செல்வம் தலைமையேற்று, இணை செயலாளர் கே.ஆர்.ஜி. காசிராஜன் அவர்களுக்கு "மனிதநேயம் காக்கும் மாண்பமை சிவத்தொண்டர்" என்ற விருதினை வழங்கி பாராட்டுரை ஆற்றினார். ஆர். பாஸ்கரன் அறிக்கை வசித்தார், சங்க பொருளாளர், வெ. கண்டிமுத்து வரவு, செலவு, அறிக்கையினை சமர்ப்பித்தார், சாகர் கல்லிகுழுமம் நிறுவனங்கள் தலைவர்,சி. மாஸ்டர் சுரேஷ் சிறப்புரையாற்றினார், நிகழ்ச்சியின் நிறைவாக மாவட்டத் துணைத் தலைவர் முத்துக்குமரன் நன்றி கூறினார்.
இக்கூட்டத்தின் வாயிலாக நிறைவேற்றப்பட்டுள்ள் தீர்மானங்கள்: தஞ்சை மாநகர எல்லைக்குட்பட்ட பல பேருந்து நிறுத்த நிழற்குடைகள் தகுந்த பராமரிப்பு இல்லாமல் கவனிப்பாரற்று கிடப்பதை உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் கவனத்தில் எடுத்து பயணிகள் பயன்பெறும் வகையில், சீர் செய்ய வேண்டுமென இச்சங்கம் கேட்டுக் கொள்கிறது. தஞ்சை பெரிய கோவில் எதிர்ப்புறம் உள்ள சாலையில், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சமின்றி சாலையை கடக்க ஒரு நடைபாதை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தும், அக்கோரிக்கையை நிறைவேற்றப்படாமல் உள்ளது வேதனை அளிக்கிறது. ஆகவே இதற்கு உடனே மேம்பாலம் அமைக்க ஏற்பாடு செய்யும்படி இச்சங்கம் மாவட்ட ஆட்சியரை கேட்டுக்கொள்கிறது. தஞ்சாவூர் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு முன்பு பயணிகள் வெயில் காலத்திலும், மழைக்காலத்திலும், அதன் தாக்கத்திலிருந்து விடுபட நிரந்தர நிழற் கூரை அமைக்கவும். தற்சமயம் சாமியான பந்தலாவது அமைக்குமாறு நிர்வாகத்திற்கு இச் சங்கம் கோரிக்கை வைக்கின்றது.
செய்தியாளர் குணசீலன்

Comments
Post a Comment