செங்குன்றம் அடுத்த சோழவரம் ஊராட்சி ஒன்றியம் நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட சோலையம்மன் நகரில் அமைந்துள்ள விவேகானந்தா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி சார்பில் இலவச கண்புரை பரிசோதனை முகாமை பள்ளியின் தாளாளர் மணிவண்ணன் தலைமையில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளி செயலாளர் ஜெயலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.இம்முகாமில் அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள்பொதுமக்களுக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, கண்புரை பரிசோதனை செய்து கண்களை பாதுகாப்பது குறித்தும், மூக்கு கண்ணாடி அணிபவர்களுக்கு ஆலோசனைகளையும் கூறி கண் சொட்டு மருந்தினை வழங்கி மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.
இதில் அரவிந்த் கண் மருத்துவமனை ராமராஜ், பாடியநல்லூர் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் கா.ஷண்முக சுந்தரம், சென்னை சோசியல் லயன்ஸ் சங்க நிர்வாகி எம்.முகம்மது அபுபக்கர் உள்ளிட் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர். இம்முகாமில் 300க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டு 20க்கும் மேற்பட்டோர் இலவச ஆபரேஷனுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment