சென்னை புழல் அடுத்த விநாயகபுரம் கல்பாலம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரது மெடிக்கல் ஷாப் கடந்த 3ம் தேதி ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கு கல்லாப்பெட்டியில் இருந்த ரூபாய் 8 லட்சம் பணம் திருடு போயிருந்தது.
இந்த நிலையில் புழல் கதிர்வேடு மேம்பாலம் அருகே ரோந்து போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்ட போது, அங்கு வேகமாக வந்த வந்த இருசக்கர வாகனத்தை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தியதில், மெடிக்கல் ஷாப்பில் திருட்டில் ஈடுபட்டவர் என்பது தெரிய வந்தது இதையடுத்து சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த பெலிக்ஸ் ஜெயபால்( வயது. 18) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 1.52 லட்ச ரூபாய் பணத்தையும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த திருட்டில் தொடர்புடைய அவரது கூட்டாளிகளையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment