தஞ்சை மாவட்ட வணிகர் சங்க பேரவையின் வணிகர் தின விழா மற்றும் 26-வது ஆண்டு விழா தஞ்சை அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நிறுவனத் தலைவர், பி.ராஜா சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் மாவட்ட செயலாளர்,எம்.ஆர். ரவி வரவேற்புரை ஆற்றினார், மாவட்டத் தலைவர், எம். கணேசன் அவைத்தலைவர்,எஸ்.ஜெயபால், மாவட்ட பொருளாளர் டி ராஜா, நகரத் தலைவர், எச். அப்துல் நசீர், நகரச் செயலாளர், ஜி. பார்த்தசாரதி நகர பொருளாளர்,எ. தொன்போஸ்கோ, துணைத்தலைவர் காசி பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு விருந்தினராக தஞ்சை மாநகராட்சி மேயர், சண்.இராமநாதன் அவர்களும் ஹோட்டல் உரிமையாளர் சங்க மாவட்ட தலைவர்,ஜி. சுப்பிரமணிய சர்மா அவர்களும் சிறப்புரையாற்றினார் கள், தஞ்சை தொழிலதிபர்கள், என். புருஷோத்தம ராஜா,எம்.அன்பு செல்வன்,வி.கே. திருநாவுக்கரசு, பி.சதீஷ், ஏ.முகமது மசூத், ஜி.கார்த்தி, ஆர்.சூரியகுமார்,எ. அருண்பாண்டியன், பி. பிரபாகரன்,கே.ஜி. வெங்கடேஷ்,பி.எல். கேசவன்,எம்.ஆனந்த், எஸ். பாலசுப்பிரமணியன், என்.முருகேசன் உள்ளிட்டோருக்கு சிறந்த வணிகர் விருது வழங்கப்பட்டது, பல்வேறு கிளைச் சங்கங்களுடைய நிர்வாகிகள் மற்றும் திரளான வணிகப் பெருமக்கள் இந்த விழாவில் பங்கேற்றனர். நடைபெற்ற வணிகர் தின விழாவில் தமிழக அரசுக்கு வணிகர்கள் சார்பில் கோரிக்கை விடுத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்|பட்டுள்ளதாவது:
தமிழக அரசு வணிகர் நலவாரியத்தை சீரமைத்து வணிகர்களுக்கு பயன்படுகிற விதத்தில் மாற்றி அமைக்க வேண்டும். தற்போதுள்ள வணிகர் நலவாரியத்தால் வணிகர்களுக்கு எந்த விதமான பயனும் கிடைப்பதில்லை. எனவே முதலமைச்சர் அவர்கள் தயவு கூர்ந்து தீ விபத்து மற்றும் இயற்கை சீற்றங்களால் வணிகர்கள் பாதிக்கப்படுகின்ற போது உதவுகின்ற விதத்தில் ஜிஎஸ்டி வரி வசூலிளிருந்து 1% -சதவீதத்தை ஒதுக்கி, வணிகர் நலவாரியம் மூலமாக உதவிகள் செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். முன்னாள் முதல்வர் டாக்டர். கலைஞர் அவர்கள் மாவட்ட ஆட்சியர், மாதத்திற்கு ஒருமுறை வணிகர்களை அழைத்து ஆலோசனை நடத்தி வணிகர்களுடைய குறைகளை தீர்த்து வைக்க வேண்டும் என உத்தரவிட்டு பல ஆண்டுகாலம் செயல்பட்டு வந்தது. அடுத்து வந்த. ஆட்சிகளில் அவை கடைப்பிடிக்கப்படவில்லை. எனவே தமிழக முதல்வர்,மு.க.ஸ்டாலின் அவர்கள் தந்தையின் வழியில் வணிகர்களுடைய குறைகேட்பு முகாமை,மாதம் ஒரு முறை மாவட்ட ஆட்சியர்கள் நடத்திட உத்தரவிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் வணிகர்களிடம் தொழில் வரி வசூலிக்கும் போது தாமத கட்டணமாக 10% சதவீதம் அபராதம் மிதிக்கப்படுகிறது. அபராத தொகையை, 2% சதவீதமாக குறைத்திட வேண்டும் என தமிழக அரசை கேட்டுககொள்கிறோம்.
திருச்சி மற்றும் கும்பகோணம் புறவழிச்சாலைகளில் இருளிலும், ஒளிர்கின்ற விதத்தில் ஒயிட் மார்க் கோடுகள் போடாத காரணத்தினால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றது. மக்களை பாதுகாக்கின்ற வகையில் கோடுகள் அமைக்க தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டுகிறோம்.
மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் கடைகளை வணிகர்கள் ஏலம் எடுக்கின்ற போது கடைப்பிடிக்கின்ற விதிமுறைகளை மாற்றி அமைத்து, தாமதமின்றி வணிகர்களிடம் கடையை ஒப்படைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
மின் நுகர்வு கட்டணம் மாதம்தோறும் கணக்கிட்டு அதனடிப்படையில் கட்டணத்தை செலுத்துகின்ற முறையை அரசு அமல்படுத்த வேண்டும் என வேண்டுகிறோம், அவ்வாறு செயல்படுத்துகின்ற போது டேரிப் அடிப்படையிலான மின் கட்டணம் வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும், குறையும் என்பதால் தமிழக முதல்வர் ஆவணம் செய்ய வேண்டுகிறோம்.
இந்த விழாவில் வணிகர்கள் திரளாக குடும்பத்தோடு கலந்து6 கொண்டார்கள் பொம்மலாட்ட கலை நிகழ்ச்சிகளும், குழந்தைகளுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றிருந்தன.

Comments
Post a Comment