செங்குன்றம் அடுத்த தீர்த்தக்கரைம்பட்டு ஊராட்சி 7வது வார்டில் அமைந்துள்ள சேரன் தெருவில் சாலை அமைக்க கோரி பொதுமக்கள் தீர்த்தகரையம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் கவிதா டேவிட்சன் மற்றும் 7வது வார்டு உறுப்பினர் கீதா விஜி ஆகியோரிடம் கோரிக்கை வைத்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையையடுத்து சேரன் தெருவில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணி அரசு அதிகாரிகளின் முன்னிலையில் துவங்கி துரிதமாக பணிகள் முடிக்கப்பட்டன.
15 ஆண்டுகளாக நிறைவேறாத தங்களது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிக் கொடுத்த ஊராட்சி மன்ற தலைவர் கவிதா டேவிட்சன் அவர்களுக்கும் 7வது வார்டு உறுப்பினர் கீதா விஜய் அவர்களுக்கும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி தங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment