திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மின்வாரிய அலுவலகத்தில் சட்ட மேதை புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 133 வது பிறந்த நாளை முன்னிட்டு பிறந்தநாள் விழா இன்று நடைபெற்றது இதில் அனைத்து மின் வாரிய செயற் பொறியாளர்கள் உதவி செயற்பொறியாளர்கள கலைக்குழுவினர் பங்கேற்று சிறப்பித்து பள்ளி மாணவர்களுக்கு பரிசளித்தனர். ஆதித்தமிழர் கலைக் குழுவினர் பாரம்பரிய தப்பாட்டம் ஆடி அனைவரையும் மகிழ்வித்தனர் பின்னர் அனைவருக்கும் பிரியாணி உணவு வழங்கப்பட்டது இதில் பா.கதிரேசன் வடக்கு திட்ட தலைவர் சி ஐ டி உதவி செயற் பொறியாளர்கள் பன்னீர்செல்வம் சிவசங்கரன் பெருமாள் ஷீலா ஸ்ரீதர் வெங்கடேசன் கன்னியப்பன் மாநில அமைப்பு செயலாளர் டாக்டர் அம்பேத்கர் பணியாளர் பொறியாளர் சங்கம் கோடீஸ்வரன் வெங்கடேசன் பார்த்திபன் காமராசு எல்லப்பன் குமார் அருள்நாதன் ஜீவா உள்ளிட்ட மின்வாரிய முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

Comments
Post a Comment