செங்குன்றம் அருகே யுவ கலை விளையாட்டு கலைக்கூடம் சார்பில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது..!
யுவ கலை விளையாட்டு கலைக்கூடம், பாடியநல்லூர் லயன்ஸ் சங்கம் இணைந்து 5 வயது முதல் 25 வயது வரை தனித் தனி பிரிவுகளாக மாநில அளவிலான சிலம்பப் போட்டியை யுவ கலை விளையாட்டு கலைக் கூடம் நிறுவனரும் செயலாளருமான ரதி ராஜா தலைமையில் செங்குன்றம் அடுத்த வடகரை ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.லயன்ஸ் கிளப் 324 ஜெ மாவட்ட ஆளுநர் வி.பஜேந்திரபாபு, மாவட்ட ஆளுநர் ஏ.டி. ரவிச்சந்திரன், முதல் நிலை ஆளுநர் பி.மணிசேகர், இரண்டாம் நிலை ஆளுநர் நரசிம்மன், மாவட்டச் செயலாளர் எழில்வளவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களையும், கோப்பைகளையும் வழங்கி கௌரவித்தனர்.பாடியநல்லூர் லயன்ஸ் சங்க நிர்வாகி கா.ஷண்முக சுந்தரம் அனைவரையும் வரவேற்றார்.
அஷ்டேடு அகாடா தமிழ்நாடு மாநிலத் தலைவர் பி.செந்தில் நாதன், பொதுச் செயலாளர் எஸ்.புவனேஸ்வரி, ஓய்வு பெற்ற ஜெயிலர் எஸ்.ஜெயராமன், சுப்பிரமணிய ஆசான் சிலம்பக் கலைக் கூட நிறுவனர் வி.ஹரிதாஸ், டாக்டர் டேவிட் மார்ச்சல் ஆர்ட்ஸ் அகாடமி சிலம்பம் நிறுவனர் கே.பார்த்திபன், லயன்ஸ் சங்க வட்டாரத் தலைவர் தமிழ்சிங்கம் சென்னை பீலிக்கான், சென்னை சோசியல் லயன்ஸ் சங்க நிர்வாகி நண்பன் எம்.முகம்மது அபுபக்கர், நம்ம காரனோடை லயன்ஸ் சங்க நிர்வாகி அன்பு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.500க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் 5 வயது முதல் 25 வயது வரையுள்ளவர்களுக்கு தனித் தனிப் பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது. இதில் சிலம்ப பயிற்சியாளர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment