திருவள்ளூர் நாடாளுமன்ற தனித் தொகுதி தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி அவர்கள் முரசு சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கும் நிகழ்வு அதிமுக கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், மாதவரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான மாதவரம் வி.மூர்த்தி தலைமையில் புழல் ஒன்றியம் தீர்த்தகரையம்பட்டு ஊராட்சியில் நடைபெற்றது.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தேமுதிக கழக செயலாளர் கே.எம்.டில்லி, அவைத்தலைவர் பாபு ராவ், பொருளாளர் ராஜேந்திரன், கேப்டன் மன்ற செயலாளர் வி.எல்.பாபு, அதிமுக வழக்கறிஞர் பிரிவு தமிழரசன், புழல் ஒன்றிய கழக அதிமுக செயலாளர் சுப்ரமணி, தேமுதிக ஒன்றிய செயலாளர் பாலவாயல் இ.சரவணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
தீர்த்தக்கரையம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் கவிதா டேவிட்சன், திருவள்ளூர் மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் டேவிட்சன் ஆகியோர் தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி அவர்களுக்கு கிரேன் மூலம் ஆளுயுர மாலை அணிவித்து தேமுதிக அதிமுக பலூன்களையும், பறக்கவிட்டு பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.
அதனை தொடர்ந்து தேமுதிக ஒன்றிய அவைத் தலைவர் ஸ்மைல் ரஞ்சித் பூங்கொத்துக்களை கொடுத்து சால்வை அணிவித்து தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி அவர்களுக்கும்,அதிமுக முன்னாள் அமைச்சர் வி.மூர்த்தி அவர்களுக்கும் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.இதில் அதிமுக, தேமுதிக தொண்டர்கள் மகளிர் என பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து புழல் ஒன்றியத்துக்குட்பட்ட தீர்த்தக்கரையம்பட்டு, புள்ளி லைன், வடகரை, அழிஞ்சிவாக்கம், விளாங்காடு பாக்கம், சென்றம்பாக்கம், ஆகிய ஊராட்சி பகுதிகளில் முரசு சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தனர்.

Comments
Post a Comment