Skip to main content

நிஜமாக தொடங்கும் பாபா வங்காவின் 2024 கணிப்புகள்..!

 புற்றுநோய்க்கான மருந்துகள் 2024 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்படும் என அவரது கணப்பில் இடம்பெற்றிருந்த நிலையில், அது தொடர்பான பெரிய அறிவிப்பை ரஷ்ய மருத்துவ ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். 

பாபா வங்காவின் கணிப்புகள் எல்லாம் உலக புகழ் பெற்றவை. அவர் தான் தான் இறப்பதற்கு முன்பாக நாட்டு நடப்புகள் குறித்த பல்வேறு கணிப்புகளை குறிப்புகளாக எழுதி வைத்துள்ளார். அந்த கணிப்புகளின்படி ஒவ்வொரு ஆண்டும் சில விஷயங்கள் நடக்க தொடங்கியதால், அவரின் கணிப்புகளை பலர் நம்ப தொடங்கிவிட்டனர். இருப்பினும் இந்த கணிப்புகள் மீது பல்வேறு விமர்சனங்களும் இருக்கிறது. அதேநேரத்தில் அவரது கணிப்புகளை தொடர்ச்சியாக உற்றுநோக்கி வரும் பலர், ஏறத்தாழ 60 விழுக்காட்டுக்கும் மேல் பாபா வங்காவின் கணிப்புகள் அப்படியே நடத்திருப்பதாக அடித்து கூறுகின்றனர். 

பாபா வங்கா கணிப்புகள்

குறிப்பாக செர்னோபில் அணு உலை விபத்து, பிரிட்டன் இளவரசி டயானா மரணம், சோவியத் யூனியன் கலைப்பு, அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல், கறுப்பின அதிபர், பிரிஸிட் போன்ற பாபா வங்காவின் கணிப்புகள் நிஜமாகியுள்ளன. அந்தவகையில் 2024 ஆம் ஆண்டு குறித்து பாபா வங்கா தன்னுடைய கணிப்பில் என்ன சொல்லியிருக்கிறார்? என்ற தகவல் வெளியாகியுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் கணிப்புகள் கடந்த ஆண்டு இறுதியிலேயே வெளியாக தொடங்கின. 

உலக நாடுகளின் பொருளாதாரத்திலும் மிகப்பெரும் மாற்றம் ஏற்படும் என்றும் கூறப்பட்டது. அதன்படி 2024ஆம் ஆண்டில் பூகம்பம், தீ மற்றும் வெள்ளம் போன்ற பல பேரழிவுகள் ஏற்படும் என்றும் மேலும் புற்றுநோய்க்கான தீர்வு 2024 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேநேரம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உயிருக்கு சொந்த நாட்டில் உள்ள ஒருவராலேயே அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் ரஷ்ய விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கான தடுப்பூசியை நெருங்கிவிட்டதாகவும் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அந்நாட்டு அதிபர் புடின் சமீபத்தில் அறிவித்தார்.

இதேபோல் பிரிட்டன் பொருளாதாரமும் சரிவை சந்தித்து வருகிறது. 2024ஆம் ஆண்டு தொடங்கி 2 மாதம் கூட முழுவதுமாக நிறைவடையவில்லை. அதற்குள்ளேயே கணிப்புகள் பலிக்க தொடங்கியுள்ளது. பாபா வங்காவின் கணிப்புகளின் படி பாஸிட்டிவான விஷயங்கள் பலிக்க தொடங்கும் போது மகிழ்ச்சி ஏற்பட்டாலும், நெகட்டிவ் கணிப்புகள் குறித்த அச்சமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

யார் இந்த பாபா வங்கா?

பல்கேரிய நாட்டை சேர்ந்த பாபா வங்கா 1911 ஆம் ஆண்டு வடக்கு மேசிடோனியாவில் பிறந்தார். சிறுவயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி கண் பார்வையை இழந்த அவருக்கு எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி கிடைத்ததாக கூறப்படுகிறது. பல்கேரிய நாஸ்டர்டாமஸ் என்று அழைக்கப்படுத் பாபா வங்கா, கடந்த 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி மரணம் அடைந்தார்.

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...