அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவ, மாணவியருக்கு "நீங்களும் சாதனையாளர்களே" எனும் தலைப்பிலான நடைபெற்ற கருத்தரங்கம்.
அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவ, மாணவியருக்கு "நீங்களும் சாதனையாளர்களே" எனும் தலைப் பிலான தலைப்பிலான கருத்தரங்கம் கொளத்தூரில் உள்ள மகராசி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் முனைவர் வி.ஜெ.சக்கரவர்த்தி அவர்கள் வரவேற்புரை கெழ்த்தினார். அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் துணை ஆணையரும். அருள்மிகு கபாலீசுவரர் கல்லூரியின் செயலாளருமான ஹரிஹரன் அவர்கள் இந்நிகழ்வினைத் தலைமை தாங்கி நடத்தினார்.
இக்கருத்தரங்கின் சிறப்பு அழைப்பாளமாக, க்ளேபல் அட்ஜெஸ்மென்ட் பவுண்டேஷனின் நிர்வாக இயக்குநர். லட்சுமி சுப்பிரமணின் அவர்கள் மாணவர்களோடு கலந்துரையாடினார், மாணவர்கள் தங்களைத் தாங்களே ஆச்சர்யப்படுத்த பழக வேண்டும். கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும். இடையீடுகளுக்கு இடம் கொடுக்காமல் நேரத்தைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் பட்டப்படிப்பை முடித்து சரியான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் இலக்கை நோக்கி நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் உங்களைச் சாதனையானராக உலகிற்கு அடையாளம் காட்டும் என்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். இந்நிகழ்வினை கல்லூரியைச் செர்ந்த ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் ஒருங்கிணைத்தனர் கபாலீசுவரர் கோயில் செயல் அலுவலர் புவியரசன் அவர்களும், கல்லூரிப் பேராசிரியர்கள் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்
செய்தியாளர்: அகரம் ஹரி






Comments
Post a Comment