சாலை விபத்தில் உயிரிழந்த முன்னாள் ராணுவ வீரரின் உடல் பாகங்கள் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்(39). இவர் முன்னாள் ராணுவ வீரர். தற்போது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தார் . இவர் வேலைக்கு சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இவரது உடல் பாகங்கள் வேலூர் சிஎம்சி மருத்துவமனை ராணிப்பேட்டை கேம்பஸூக்கு தானமாக வழங்கப்பட்டது. இந்த தானத்தை பெற்றுக் கொண்ட வேலூர் சிஎம்சி நிர்வாகம் உடல் உறுப்புகள் தேவைப்பட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதில் இதயம் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனைக்கும், லிவர் வேலூர் சிஎம் சி ராணிப்பேட்டை கேம்பஸுக்கும், இடதுபுற கிட்னி வேலூர் சிஎம்சி ராணிப்பேட்டை கேம்பஸுக்கும் வலதுபுற கிட்னி சென்னை போரூர் எஸ்ஆர்எம்சி மருத்துவமனைக்கும் தானமாக அனுப்பி வைக்கப்பட்டன. இதன் மூலம் உடல் உறுப்புகள் தேவைப்பட்டோர் இந்த உடல் உறுப்புகளை பெற்றுக் கொண்டு மீண்டும் வாழ்க்கையில் புதிய ஒளி பெற்றனர். சாலை விபத்தில் கடந்த 18ஆம் தேதி உயிரிழந்த சரவணனுக்கு ரேகா என்ற மனைவியும், ஒரு மகனும் ,மகளும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சரவணனின் தாய், தந்தையர் விவசாயக் கூலி வேலைகள் செய்கின்றனர். சரவணன் ண்ண திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகவலை வேலூர் சிஎம்சி மருத்துவமனை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் துரை ஜாஸ்பர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் வாசுதேவன்

Comments
Post a Comment