Skip to main content

குடிபோதையில் மூன்று பேரை கத்தியால் வெட்டி கார்களின் கண்ணாடியை உடைத்து நொறுக்கிய மர்ம நபர்கள்..!

 செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் அங்காள பரமேஸ்வரி கோவில் தெருவில் வசிப்பவர் கார்த்திகேயன் (வயது 24 ) அவரது நண்பர் அதே பகுதியை சார்ந்த விக்கி என்ற அஜித் (வயது 24 ) சார்லஸ் (வயது 26) இவர்கள் மூவரும் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் அங்காள பரமேஸ்வரி கோவில் அருகே உள்ள மைதானத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள். 




அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர்கள் ஹெல்மெட் அணிந்து கொண்டு கத்தியை காட்டி மிரட்டி அரசியல் பிரமுகரின் ஒருவர் பெயரை சொல்லி அவர் வீடு எங்கே உள்ளது என கேட்டதில் அவர்கள் தெரியாது என்று பதில் கூறினார். இதனால் ஆத்திரமுற்ற அவர்கள் தனது கையில் இருந்த கத்தியால் சற்றும் தாமதிக்காமல் மூன்று பேரையும் தலை, கை, கால், கழுத்து ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்ற போது அருகே நிறுத்தப்பட்டு இருந்த மூன்று கார்களையும் கண்ணாடிகளையும் உடைத்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து மூவரும் செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு அவர்கள்  பலத்த காயமடைந்து இரத்தம் வழிந்த நிலையில் இருந்த அவர்களை போலீசார் உடனடியாக அரசு ஸ்டாலின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 




அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து  வருகின்றனர். இதுகுறித்து செங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தின் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆராய்ந்து மர்ம நபர்களை தேடி வருகிறார். மேலும் இதே கும்பல் இரவு இதேபோல வியாசர்பாடி, கொடுங்கையூர் ஆகிய பகுதிகளில் கடைகளில் உள்ள பொருட்களை உடைத்து சேதப்படுத்தியும், இருவரை கத்தியால் வெட்டியும்  பின்னர் புழல் அடுத்த கதிர்வேடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ஸ்டீபன் ராஜ் ( வயது 20 ) என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த இருசக்கர வாகனத்தை பறித்து சென்றது, போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. நேற்று முன்தினம் இரவு நடந்த இந்த தொடர் சம்பவத்தால் குற்றவாளியை பிடிக்க ஏழு தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.





 செய்தியாளர்: அகமது அலி 


Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...