Skip to main content

புழல் அடுத்த கதிர்வேடு பகுதியில் பஞ்சு மெத்தை கடையில் தீ விபத்து..!

 ரெட்டேரி செங்குன்றம் நெடுஞ்சாலை, கதிர்வேடு சாலை சந்திப்பு அருகே தேவராஜ், விஜயலட்சுமி என்பவருக்கு சொந்தமான இடத்தில் அதே பகுதியை சேர்ந்த அசன்பாட்சா  (வயது 40)  என்பவருக்கு ஒப்பந்த அடிப்படையில் கடையை வாடகைக்கு விட்டுள்ளார்.





இவ்விடத்தில் அசன்பாட்சா  சுமார் 4 வருடங்களுக்கு மேலாக பஞ்சு மெத்தை கடை வைத்து நடத்தி வருகிறார். உரிமையாளரான கணவன், மனைவி தேவராஜ் ,விஜயலட்சுமி அருகிலேயே தனக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் மாலை சுமார் 5 மணியளவில் பஞ்சு மெத்தை கடையில் இருந்து வென்புகை வருவதை கண்ட பொதுமக்கள், இதுபற்றி உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே  காவல் நிலைய போலீசார் தீயணைப்பு துறையினருக்கு தெரிவித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாதவரம் தீயணைப்பு துறை அலுவலர் பர்குனண் மற்றும் வீரர்கள் தீயணைப்பு வாகனத்துடன் களத்தில் இறங்கினார்கள்.


ஆனாலும் பஞ்சு பொருட்களின் மீது பரவிய தீ மளமளவென்று கொழுந்து விட்டு எரிய தொடங்கியதை தொடர்ந்து அம்பத்தூர், செங்குன்றம் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 20 க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு, பின்னர் இரண்டு மணிநேர போராட்டத்திற்கு பின்னர் தீ முற்றிலுமாக அணைத்தனர். இதில் இடத்தின் உரிமையாளர் தேவராஜ், விஜயலட்சுமி வீட்டில் உள்ள டிவி மின்குளிர்சாதன பெட்டி உட்பட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. மேலும் அவர் வீட்டில் பீரோவில் இருந்த பணம் ரூபாய் 60 ஆயிரம் துணிமணிகள் அனைத்தும் எரிந்து  சாம்பலானது. இத்தீவிபத்தில் பஞ்சு மெத்தை கடையின் உள்ளே இருந்த மிஷின், பஞ்சு மெத்தை போன்ற எரிந்து போன பொருட்கள் மதிப்பு 3 லட்சம் என கூறப்படுகிறது.


இதன்பின்  புழல் சரக காவல் உதவி கமிஷனர் ஆதிமூலம் , மாமன்ற உறுப்பினர் சங்கீதாபாபு மாதவரம் தாசில்தார் நித்யானந்தம் வருவாய் அலுவலர் கரோலின் ஆகியோர்கள் சம்பவ இடத்திற்கு வந்து,  வீடு இழந்து தவித்த தேவராஜ் விஜயலட்சுமி தம்பதியினருக்கு ஆறுதல் கூறி அரசு சார்பில் உணவு, உடை, அரிசி, ரூபாய் 5000 பணம் ஆகியவைகளை உதவித்தொகையாக அளித்தனர். இச்சம்பவம் குறித்து புழல் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மின்சார கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.




செய்தியாளர்: அகமது அலி 

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...