திண்டுக்கல், நல்லாம்பட்டியில் பிள்ளையார்நத்தத்தை சேர்ந்த விஜயகுமார் வசித்து வருகிறார். இவரது பிறந்து 45 நாளான ஆண் குழந்தைக்கு நேற்று தடுப்பூசி போட்டுள்ளனர். இந்நிலையில் இன்று காலை மர்மமான முறையில் ஆண் குழந்தை உயிரிழந்தது. இதனால் பெற்றோர் கொதிப்படைந்துள்ளனர். இது குறித்து தாலுகா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து பெற்றோர் கூறியதாவது: குழந்தைக்கு 45 ஆவது நாள் ஊசி போட்டவுடன் காய்ச்சல் ஏற்பட்டது. ஊசி போட்டதால் காய்ச்சல் வரும் என செவிலியர்கள் தெரிவித்தனர். இதை நம்பி நாங்கள் எந்த டாக்டரிடமும் அழைத்துச் செல்லாமல் இருந்தோம். இதனால் குழந்தை சோர்வடைந்து இறந்துள்ளது. எங்கள் குழந்தை இறப்புக்கு சுகாதாரத் துறை பொறுப்பு ஏற்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்றனர்.
செய்தியாளர்: அரியநாயகம்

Comments
Post a Comment