Skip to main content

நல்லம்பாக்கம் அருள்மிகு ஶ்ரீநல்லமங்கை உடனுறை ஶ்ரீசொர்ணலிங்கேஸ்வரா் ஆலயத்தில் நடைப்பெற்ற அன்னாபிஷேகம்

 


செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட  நல்லம்பாக்கம் ஊராட்சியில்  மலைமீது சுமார் 100ஆண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த அருள்மிகு திருநல்லமங்கை உடனுறை சொர்ண லிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது. இதில் சொர்ணலிங்கேஸ்வரார் தாயார் திருநல்லமங்கை ஈஸ்வரி உடன் எதிரே நந்தியபெருமான் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்கள். முன்னொரு காலத்தில் இங்கு வந்த நல்லபாக்கத்திற்கு வருகைப்புரிந்த வடிவானந்த சித்தர் என்பவர் இங்குள்ள மூலவர்களை உருவாக்கி தியானம் செய்து ஜோதியாக கலந்துவிட்டார் என இங்குள்ளவர்கள் கூறுகின்றனர்கள். இந்நிலையில் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் கோவில் அருகே வசித்துவந்த  சிவகுருநாதன் என்ற இளைஞர் கனவில் மலைமீது உள்ள சொர்ணலிங்கேஸ்வரன் தம்பதியர் சமேதராக தோன்றி தன்னை வழிபட பணித்துள்ளனர்கள்.



அது முதல் சிவகுருநாதன் இல்லறவாழ்வை துறந்து கோவிலில் பூஜை செய்து வணங்கினார். பல்வேறு இடர்பாடுகளை சந்தித்த சிவகுருநாதன் மலைக்கு கீழ்கோவிலை ஏற்படுத்தி இன்றளவும் பூஜைசெய்து வருகிறார். மூலவர்களின் அளப்பரிய சக்தியால் கோவிலின் மகிமை தமிழகமெங்கும் பரவிவருகிறது. இந்நிலையில் நேற்றைய முன்தினம் திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு மேல் பெளர்ணமியையொட்டி மலை அடிவாரத்தில் இருக்கும்  கோவிலில் உள்ள ஶ்ரீஅகோரவீரபத்திரா் மற்றும் பத்திரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைப்பெற்று தீபதூப ஆராதனைகள் காட்டப்பட்டன. இரவு நேரத்தில் மலை உச்சியில் இரவு 10 மணிக்கு மேல் சொர்ண லிங்கேஸ்வரர் மூலவருக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாரதனை உள்ள  நடைப்பெற்றன. 

அதன் தொடர்ச்சியாக நேற்று காலை 09.00 மணிக்கு மூலவர் திருநல்லமங்கை ஈஸ்வரி  சொர்ணலிங்கேஸ்வர் ,நந்தியபெருமானுக்கு சுமார் 150கிலோ அரிசியினால் ஆனா அன்னத்தில் அன்னாபிஷேகம் செய்தனர்கள். அதேப்போல் மலை அடிவாரத்தில் உள்ள சொர்ணலிங்கேஸ்வரருக்கும் அன்னாபிஷேகம்  நடைப்பெற்று, அதனைத் தொடர்ந்து சிறப்பு தீபதூப ஆராதனைகள் காட்டப்பட்டன. அதனைத் தொடர்ந்து வரிசையில் நின்று அர்ச்சனை செய்துவழிப்பட்ட பொதுமக்கள் அன்னதானம் சாப்பிட்டுச் சென்றனர்கள். அன்னாபிஷேகம் நிகழ்ச்சியில் பல்வேறு ஊர்களிலிருந்து சுமார் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பக்தர்கள் சிவனாடியார்கள் கலந்து கொண்டனர்கள். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய அறங்காவலரும் சிவசேவகன் சிவகுருநாதன் நல்லம்பாக்கம் இளைஞர்கள் பிரம்மாண்டமாக செய்து முடித்தார்கள்.


செய்தியாளர்: மூர்த்தி 


Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...