Skip to main content

12 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தந்தை உட்பட மூன்று பேர் கைது..! திண்டுக்கல்லில் கொடூரம்..!


திண்டுக்கல் பாரதிபுரத்தை சேர்ந்த லிங்கமூர்த்தி வயது 47. இவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து தனது 12 வயது மகளை அவர் வளர்த்து வந்தார். மனைவி இல்லாத காரணத்தால் தனது ஆசைக்கு மகளை பயன்படுத்தி வந்தார். மேலும் தான் வேலைக்கு செல்லும்போது, அதே பகுதியை சேர்ந்த நெசவு தொழிலாளியான கண்ணன் என்பவரது வீட்டில் விட்டுச்சென்றார். கண்ணனுக்கு திருமணமாகி அவரது மனைவியும் பிரிந்து சென்றுவிட்டார். அவரது மகள் மூளைவளர்ச்சி இல்லாமல் இறந்துவிட்டார்.




 இந்த சூழ்நிலையில் பாதுகாப்புக்காக வந்த சிறுமியிடம் கண்ணனும் பாலியல் தொந்தரவு செய்தார். இதுகுறித்து தனது தந்தையிடம் அந்த சிறுமி கூறியுள்ளார். அதற்கு கண்ணன் தனக்கு நெருக்கமான நண்பர். மேலும் குடும்பத்திற்கு ஏராளமான உதவிகள் செய்து வருகிறார். எனவே இதுகுறித்து யாரிடமும் கூறவேண்டாம் என மகளை மிரட்டியுள்ளார். சிறுமியும் தனது தந்தைக்கு பயந்து இதனை யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். இச்சூழ்நிலையில் சிறுமியுடன் கண்ணன் நெருக்கமாக இருந்ததை அதேபகுதியை சேர்ந்த அரிசிக்கடை உரிமையாளர் முகமதுரபீக் என்பவர் பார்த்துள்ளார். இதனைதொடர்ந்து அவரும் சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். 

இதனால் 12 வயது சிறுமி 3 மாத கர்ப்பிணியானார். இதுகுறித்த எந்த ஞானமும் தனக்கு இல்லாததால் தனக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை யாரிடம் சொல்வது என தனிமையில் அழுது வந்துள்ளார். இதனை அறியாமலேயே தந்தையும் அவரது நண்பர்களும் தொடர்ந்து சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளனர். இதனால் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு, திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது சிறுமி 3 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது.

 இதுகுறித்து சமூகநலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தினர். அப்போது தனக்கு நேர்ந்த கொடுமைகளை சிறுமி சொல்லி கதறி அழுதார். இதனைதொடர்ந்து திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசார் சிறுமியை சீரழித்த தந்தை உள்பட 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இவர்களை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு எஸ்.பி பாஸ்கரன் பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவின்பேரில் சிறுமியை சீரழித்த தந்தை உள்பட 3 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


செய்தியாளர்: அரியநாயகம்   

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...