Skip to main content

செங்குன்றத்தில் பண மோசடியில் ஈடுபட்ட வழக்கறிஞர் மனைவியுடன் கைது

திருவள்ளூர் மாவட்டம்  செங்குன்றம் சோத்துப்பாக்கம் சாலையில் சித்தீக் என்பவருக்கு சொந்தமான வணிக  வளாகத்தில்  சுமார் 30 வருடங்களுக்கு மேலாக மாரியப்பன் (வயது 52) என்பவர் வாடகைக்கு  எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வருகிறார்.இந்த  கடைக்கு முன்வைப்பு தொகையாக 82 லட்சம் ரூபாய் முன்தொகையாக  மாரியப்பன் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 



இந்நிலையில் கட்டிட உரிமையாளர் சித்தீக்  கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென வேறு ஒருவருக்கு கட்டிடத்தை விற்பனை செய்துள்ளார்.  புதியதாக இடத்தை வாங்கிய நபர்  கடையை காலி செய்ய   மாரியப்பனிடம் கூறியபோது அதற்கு அவர் இந்த கடைக்கு நான் முன்பணமாக கொடுத்த தொகையை திருப்பி செலுத்தினால் கடையை காலி செய்து விடுகிறேன் எனக்கூறியதாக சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக மாரியப்பன் தமது முன்னாள் கட்டிட உரிமையாளர் சித்தீக் என்பவரிடம் பணத்தை பெற்றுதர வழக்கறிஞர்  செங்குன்றத்தை சேர்ந்த நந்தகோபாலன் என்பவரை அணுகி  உதவி கேட்டு பின்னர் வழக்கு  செலவுக்காக 2.5 லட்ச ரூபாய் வழக்கறிஞருக்கு கொடுத்துள்ளார்.அதன் பின்னர் சமரச பேச்சு வார்த்தையின் மூலம் கட்டிட உரிமையாளர் 54 லட்ச ரூபாயை   திருப்பி கொடுப்பதாக  ஒப்புக்கொண்டார் . இந்த செய்தியை மாரியப்பனிடம் வழக்கறிஞர் நந்தகோபாலன் கூறி அந்த தொகையை  மாரியப்பன் வங்கி  கணக்கில் செலுத்தினால்  வருமானவரி கட்டவேண்டும் என  காரணம் காட்டி  தமது மனைவி சாந்தகுமாரியின் வங்கி கணக்கில் பணம்  பெற்று கொண்டுள்ளார். அதன் பிறகு  10 லட்ச ரூபாய் மட்டுமே  மாரியப்பனுக்கு கொடுத்த  வழக்கறிஞர் நந்தகோபாலன் எஞ்சிய 44லட்ச ரூபாயை கொடுக்க  காரணங்கள் சொல்லி  காலங்கள் கடத்தி ஏமாற்றி  வந்தார்.இதனால் பொறுமையிழந்த மாரியப்பன்  வழக்கறிஞர் நந்தகோபாலன்  மீது செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட செங்குன்றம் குற்றப்பிரிவு போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து  வழக்கறிஞர் நந்தகோபால் மற்றும் அவரது மனைவி சாந்திகுமாரி ஆகிய இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில்  குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.பின்னர் கணவன் மனைவி இருவரையும் கைது செய்த செங்குன்றம் போலீசார்  இவர்கள் மீது நம்பிக்கை மோசடி, பண மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.நியாயம் பெற்றுத்தர நியமிக்கப்பட்ட வழக்கறிஞரே இதுபோல்  பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


செய்தியாளர்: அகமது அலி 

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...