தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தேசிய தரச் சான்று பெற்றது என செய்திகள் வருகிறது.. மனசாட்சி உள்ள மருத்துவர்கள் இதயத்தில் கை வைத்து சொல்லலாமா.!!! சுமார் 10 வருடத்திற்கு மேல் உள்ள சுகாதாரப் பணியாளர் மட்டும் தான் இப்போதும் பார்த்து வருகிறார்கள்.
செவிலியர்களும் பற்றாக்குறை இருக்கிறது மருத்துவர்களும் பற்றாக்குறை இருக்கிறது. பல இடங்களில் குடிநீர் கிடைப்பதில்லை. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் கனிவான முறையில் பேசுவதே கிடையாது. ஏதோ இவர்கள் சொந்த மருத்துவமனை போல் இயங்குகிறது. சில இடங்களில் சுகாதாரமற்ற முறையில் காட்சியளிக்கிறது. அனைத்து கழிவுநீர் கோப்பைகளுக்கு மூடி இல்லாமல் ஆங்காங்கே இருக்கிறது, 557 படுக்கை வசதியுடன் இருப்பது பெருமை கிடையாது முறையான செவிலியர்கள் பற்றாக்குறை இருக்கிறது.
பயிற்சி மருத்துவர்கள் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் வைத்துவிட்டு முறையான மருத்துவர்கள் இல்லாமல் இயங்கும் அரசு மருத்துவமனை தான் தென்காசி மருத்துவமனை மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு திட்டத்தின் தொலைநோக்குப் பார்வையில் பல கட்டிடங்களை மக்களுக்காக அர்ப்பணித்து வருகின்றது. ஆனால் இங்கே அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு ஒரு சிகிச்சை நடுத்தர ஏழை வர்க்கத்திற்கு ஒரு சிகிச்சை என பகுதிகளாக பிரிக்கப்பட்டு சிகிச்சை அரங்கேற்றம் செய்து வருகிறார்கள்.
வெற்று விளம்பரம் தான் இந்த மருத்துவமனை செயல்படுகிறது பல நன்கொடையாளர்கள் வர்த்தக பிரமுகர்கள் முன்னாள் இந்நாள் கட்சி பொறுப்பாளர்கள் பல்வேறு வகையில் உதவி செய்து வருகிறார்கள். ஆனால் இங்கு சிகிச்சைக்கு வருவர்களிடம் முறையற்ற முறையில் சிலர் பேசி வருகிறார்கள், இது கண்டிக்கத்தக்க கூடியது .ஆய்வக பணியாளர்கள் ஆள் பார்த்து பதிவதும்.. மருந்தாளர்கள் வானளாவிய அதிகாரம் படைத்தது போல் மாத்திரைகளை ஜன்னல் வழியாக வீசுவதும் தொடர்கதையாக இருக்கிறது. உண்மையிலேயே சொல்லப்போனால் ஒப்பந்த பணியாளர்கள் தான் வேலை பார்த்து வருகிறார்கள் உண்மையாக அரசு பணத்தில் வேலை பார்ப்பவர்கள் ஒருவர் கூட இங்கு மனசாட்சிப்படி வேலை பார்ப்பவர் கிடையாது. மருத்துவமனை வளாகங்களில் பல இடங்களில் துர்நாற்றம் வீசுகிறது குழந்தை பிறந்தால் பணம்... வீழ்ச்சேரில் ஒருவரை மாற்று இடத்திற்கு கொண்டு போனால் பணம், இறந்தவர்கள் உடலை மறு கூர் ஆய்வு செய்து சடலத்தை தருவதற்கும் பணம் இவையெல்லாம் அரசு முறையாக கவனிக்கிறதா என்ற கேள்வியும் எழும்புகிறது. அவசர அவசரமாக தார்சாலை போடப்பட்டுள்ளது ஆய்வுக்கு வருகிறார்கள் என்று சொன்ன பிறகு இரண்டு நாளுக்கு முன்பே தார் சாலை போடப்பட்ட அவல நிலைதான் தென்காசி தலைமை மருத்துவமனை இங்கு முறையாக மருத்துவர்கள் பல நேரங்களில் வருவதே கிடையாது. காலையில் 10:00 மணிக்கு வருவது 12 மணிக்கு செல்வது பிறகு மறுநாள் தான் மருத்துவமனைக்கு வருவது தொடர் கதையாக இருக்கிறது. இங்கே பணிபுரியும் அரசு மருத்துவர்கள் ஒவ்வொருவருடைய சொத்துக்கணக்கையும் அரசு ஆய்வு செய்ய வேண்டும் அரசு மருத்துவமனையில் பணிபுரிபவர்கள் தனியாக சொந்தமாக நடத்தி வரும் கிளீனிங் சென்று விடுகிறார்கள.
அரசு மருத்துவர்கள் வருகை பதிவு செய்வதை அரசு கண்காணிக்கப்பட வேண்டும், கணினி மூலம் பதிவு அதற்கு ஒரு ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் ஆய்வு செய்ய வேண்டும், அண்டை மாநிலமான கேரளா ஆந்திராவில் அரசு மருத்துவமனை எப்படி செயல்படுகிறது என்பதை பார்த்து தமிழக அரசு இங்கே செயல்படுவதற்கு சட்டதிட்டங்களையும் புதியதாக வடிவமைக்கப்பட வேண்டும். கொரோனா காலகட்டங்களில் கொரோனா ஊசி போடாமல் பலர் சான்றிதலுக்காக ஒவ்வொரு ஊசிக்கு ரூபாய் கட்டணம் செலுத்தி பல இடங்களில் கணினி மூலம் ரசித்து பெற்றுள்ளனர், குறிப்பாக அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள் நடுத்தர வர்க்கத்துடன் ஏழைகளும்தான் அரசு மருத்துவமனையை கோவிலாக அரசு மருத்துவர்களை தெய்வமாக பார்க்கிறார்கள் ஆனால் சில மருத்துவர்கள் முறையற்ற முறையில் நடந்து வருகிறார்கள் என்பது வேதனையான விஷயம். கர்ப்பிணி பெண்களிடம் கொச்சை வார்த்தைகளில் பேசும் மருத்துவர்கள் நீங்களும் பெண்கள் தான் என்பதை எப்போது சிந்தித்து பார்க்க போகிறீர்கள் என்பது தெரியவில்லை நீங்கள் படித்து மருத்துவர்கள் ஆனீர்கள் படிப்பறிவில்லாத மக்களிடம் எப்படி பேசுவது என்று கூட தெரியாமல் நீங்கள் இருப்பது வேதனையான விஷயமாக இருக்கிறது உண்மையில் சொல்லப்போனால் தென்காசி அரசு தலைமை மருத்துவமனை விளம்பரமான மருத்துவமனையாக செயல்படுகிறது. பாதிக்கப்பட்ட பலரை நேரில் பார்த்த நண்பர் ஒருவர் கூறியது..நடவடிக்கை எடுக்கப்படுமா.?
செய்தியாளர்: சந்திரன்


.jpeg)

Comments
Post a Comment